வெள்ளி, 14 ஜனவரி, 2022

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

உலகெங்கும் பறந்து வாழும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் எனது தை திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மணம் நிறைந்து குணம் நிறைந்து அருள் நிறைந்து பொருள் நிறைந்து நலம் நிறைந்து செழுமையோடு வாழ உளமாற வாழ்த்துகிறேன். உழவர்கள் இல்லையேல் உணவில்லை உணர்வுடன் உழவர்களுக்கு நன்றி சொல்லும்நாள் உலகில் சூரியன் இல்லையேல் ஒளி இல்லை நன்றி சொல்வோம் சூரியனுக்கு நீரும்,காற்றும் இல்லையேல் உயிரில்லை நன்றி சொல்வேம் நீருக்கும்,காற்றுக்கும் முத்தாய்பாக நிலமில்லையேல் ஒன்றுமில்லை நன்றிசொல்வேம் நிலமானபூமிக்கு இவை அனைத்தையும் நமக்கு கொடையாக கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்வேம் இறைவன் நமக்கு கொடையாக கொடுத்த இந்த உலகில் நாம் வாழும்காலம் குறைவு அவ்வாறு வாழம்வரையில் நம்மோடு வாழும் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் அனைத்து உயிரினங்களுடன் அன்பு செலுத்தி வாழமுயலுவேம் உழவுக்காக நமக்குதவும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லுவேம் அறிவோடும் தெளிவோடும் நாம் நம்மை எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்வோம் திடமான மனதுடன் இயற்கைக்கு புறம்பான செயல்களை செய்யாமல் இயர்க்கையோடு ஒன்றித்து வாழபழகுவோம் உணவுக்கான தானியங்கள் உற்பத்தி செய்யும் போது இயற்கைக் உரம் மற்றும் பண்டையகால இயற்கை பயிர் மருத்துவ வழிமுறைகளை பின்பற்றி விவசாயம் செய்யபட முயல்வோம் நிலம்,நீர்,காற்று,ஆகயம் அனைத்துக்கொடைகளும் மாசுபடாமல் அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு சோர்க உறுதி ஏர்போம். நன்றி.